Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

ஜுன் 12, 2022 10:09

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில், விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட்டு உள்ளார். 

மேலும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜசேகரன் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்